கலவை இயந்திரத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் உயிரிழப்பு...

by Staff / 25-03-2022 12:02:40pm
கலவை இயந்திரத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் உயிரிழப்பு...

சிக்கனம்பட்டி குப்பூர் பகுதியை சேர்ந்தவர் மோகனப்பிரியன். இந்தநிலையில், இவர் அங்குள்ள கிரஷர் ஒன்றில் வேலை செய்து வருகிறார். 

நேற்று வழக்கம் போல கான்கிரீட் கலவை கலக்கும் இயந்திரத்தில் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

அவ்வப்போது அங்கு வேலை செய்து வரும் வசந்தகுமார் என்பவர் இயந்திரத்தை வேகமாக இயக்கியுள்ளார்.

இதில் மோகனபிரியன், உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிரிந்துள்ளார். இதுகுறித்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

Tags :

Share via