சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் கி.ரா காலமானார்!

by Editor / 18-05-2021 09:19:36am
சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் கி.ரா காலமானார்!

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் என்கிற கி.ரா(வயது 99) வயது மூப்பால் புதுச்சேரியில் காலமானார்.

கரிசல் இலக்கியத்தின் தந்தை என போற்றப்படுபவர் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். 'கோபல்லபுரத்து கிராமம்' நாவலுக்காக இவருக்கு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது. மேலும் இவர் பல சிறுகதை தொகுப்புகள், குறுநாவல்கள், கட்டுரை தொகுதிகள், நாவல்களையும் எழுதியுள்ளார், இவரின் பல புத்தகங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. இவர் இலக்கிய சிந்தனை விருது. தமிழக அரசு விருது, கனடா இலக்கிய தோட்டம் வழங்கிய தமிழ் இலக்கிய சாதனை விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்

 

Tags :

Share via