பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுமி கூட்டு பலாத்காரம் ஐந்து பேர் கொண்ட கும்பல் கொடூர தாக்குதல்

by Staff / 16-04-2022 02:03:28pm
பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுமி கூட்டு பலாத்காரம் ஐந்து பேர் கொண்ட கும்பல் கொடூர தாக்குதல்

மேற்குவங்கம் மாநிலம் பீர்பம் மாவட்டத்தில் மீண்டும் ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்த சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். திருவிழாவை காண நண்பருடன் சென்று அந்தப் பெண் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது 5 பேர் கொண்ட கும்பல் காதலனை அடித்து உதைத்து அவரை ஆற்றங்கரைக்கு கடத்திச் சென்றது அங்கு ஐந்து பேரும் அவரை பாலியல் வன்கொடுமை செய்தனர். இதையடுத்து அந்த சிறுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த காவல்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி போதும் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.

 

Tags :

Share via