கொடைகானலில் சிறப்பான 12 இடங்களைக்காண பயணிகளுக்கு அரசு பேரூந்து வசதி
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திண்டுக்கல் மண்டலம் கொடைக்கானல்
பணிமனை சார்பாக,இயற்கை எழில்காட்சியை(Nature Scene) [பனிரெண்டு இடங்கள்]
கண்டு ரசிப்பதற்கு கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இயற்கை எழிலல்காட்சியை கண்டுகளிப்படுதற்கு பெரியவர்களுக்கு ரூ.150-ம்,சிறுவர்களுக்கு ரூ.75 எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தினமும் காலை 08:00 மணிமுதல் துவங்கும் இச்சேவையை சுற்றுலா பயணிகள்,பொது மக்கள் என அனைவர்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திண்டுக்கல் மண்டலம் சார்பாக கேட்டுகொள்ளப்பாட்டுள்ளது.
Tags :