நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாவிட்டால் பதவி விலக போவதாக பிரதமர் ராஜபக்சே அறிவிப்பு

by Staff / 28-04-2022 12:44:34pm
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாவிட்டால் பதவி விலக போவதாக பிரதமர் ராஜபக்சே அறிவிப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை இல்லாவிடில் பதவி விலகப் போவதாக அந்நாட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நீடித்து வருகிறது .இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை இருக்கும்வரை தன்னை யாரும் பதவியில் இருந்து அகற்ற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். ஜனநாயக நாட்டில் போராட்டங்கள் நடப்பது வழக்கம் தான் என்றும் போராட்டத்திற்காக அரசுகள் விளக்குவதால் எந்த அரசும் இந்த நாட்டில் இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via