பிளாஸ்டிக் மற்றும் இரும்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து

by Staff / 08-05-2022 04:05:07pm
பிளாஸ்டிக் மற்றும் இரும்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து


சென்னை அடுத்து பூந்தமல்லி அருகே பழைய பிளாஸ்டிக் கிடங்கில் ஏற்பட்ட தீ மேலும் மூன்று குடோன்கள் பரவியதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை விண்ணை முட்ட எழுந்தது.  மலையம்பாக்கம் பகுதியில் அந்த கிடங்கில் இன்று காலை திடீரென தீப்பற்றியது கூறப்படுகிறது. அதில் தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்ததோடு அருகில் இருந்த மூன்று குடோன்களுக்கும்  பரவியது .தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.. உரிய அனுமதியில்லாமல் குடியிருப்புகளுக்கு மத்தியில் குடோன்கள் செய்யப்பட்டு வருவதாக அங்குள்ள பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

 

Tags :

Share via