புதுச்சேரியில் இரவில் வீடு புகுந்து கத்தியால் தாக்கிய வழக்கு 5 பேர் கைது 4 கத்திகள் பறிமுதல்

by Staff / 13-05-2022 02:07:34pm
புதுச்சேரியில் இரவில் வீடு புகுந்து கத்தியால் தாக்கிய வழக்கு 5 பேர் கைது 4 கத்திகள் பறிமுதல்

புதுச்சேரி வானரப் பேட்டையில்  இரவு நேரத்தில் வீடு புகுந்து ஒருவரை வெட்டிய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். தாமரை நகரை சேர்ந்த கமலஹாசன் மட்டும் முத்தியால்பேட்டையில் சேர்ந்த மஞ்சினி மற்றும் அவரது மனைவி சரளா ஆகியோர் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. கடந்த 9ஆம் தேதி இரவு கமலஹாசன் வீட்டிற்கு வந்த சரளா மற்றும் அவரது மகன்கள் உள்பட 5 பேர் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென கத்தியை எடுத்து கமலஹாசனை தலைப்பகுதியில் தாக்கியதாக கூறப்படுகிறது. தப்பி ஓடிய 5 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களை விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via