ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு காரில் கடத்த முயன்ற 3 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்

by Staff / 13-05-2022 02:16:40pm
ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு காரில் கடத்த முயன்ற 3 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு காரில் கடத்த முயன்ற சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான 127செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்தனர். சித்துர் மாவட்டத்திலுள்ள சத்தியவேடு நிலவாய் கிராமங்கள்  உள்ளிட்ட வனப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்ட செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மூன்று வெவ்வேறு சம்பவங்களில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 இருசக்கர வாகனம் மூன்று கார்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

 

Tags :

Share via