பாகிஸ்தானில் ராணுவ வாகனத்தை குறிவைத்து மனித வெடிகுண்டு தாக்குதல் 6 பேர் பலி

by Staff / 16-05-2022 01:13:36pm
பாகிஸ்தானில் ராணுவ வாகனத்தை குறிவைத்து மனித வெடிகுண்டு தாக்குதல் 6 பேர் பலி

 பாகிஸ்தானில் ராணுவ வாகனத்தை குறி வைத்து நிகழ்த்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்வாரிஜான்  மாவட்டத்தில் மிரான்ஸ் என்னும் பகுதியில் உள்ள சந்து வழியாகச் பாதுகாப்பு படையினரின் வாகனம் சென்று கொண்டிருந்து உள்ளது. அப்போது உடலில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு பாதுகாப்பு படையினரின் வாகனத்தை நோக்கி நடந்து வந்த மர்ம நபர் திடீரென வெடிகுண்டை வெடிக்க செய்து இருக்கிறார் இந்த குண்டுவெடிப்பில் அங்கிருந்த மூன்று குழந்தைகளும் மூன்று ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அப்பாவி குழந்தைகளை கொலை செய்த காட்டுமிராண்டிகளை பிடிக்கும் வரை ஓயமாட்டோம் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via