சென்னையில் இருசக்கர வாகன விபத்து உயிரிழப்புக்களை தடுக்க கட்டாய ஹெல்மெட்

by Editor / 23-05-2022 09:11:34am
சென்னையில் இருசக்கர வாகன விபத்து உயிரிழப்புக்களை தடுக்க கட்டாய ஹெல்மெட்

சென்னையில் இன்று முதல் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் மீது  கடும் நடவடிக்கை.இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் இருப்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்.என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை.

 சென்னை, விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும் போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளை மாநகர காவல்துறை எடுத்துவருகிறது. 2021-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளை ஆய்வு செய்ததில், இரு சக்கர வாகன விபத்துக்களில் 611 பேர் உயிரிழந்துள்ளனர். ஹெல்மெட் அணியாமல் பயணித்ததால் 477 இருசக்கர வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் 134 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்துள்ளனர். கடந்த 5 மாதங்களில் இரு சக்கர வாகனம் மூலமாக 841 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 741 பேர் இருசக்கர வாகன ஓட்டிகள் என்றும், 127 பேர் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்தவர்கள்என்றும் அந்த ஆய்வில் சென்னை போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தநிலையில், இருசக்கர வானங்களில் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம்  ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு சென்னை மாநகர  பகுதிகளில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனை கண்காணிக்க பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

Tags : Mandatory helmet to prevent two wheeler accident fatalities in Chennai

Share via