திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு  மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

by Editor / 30-05-2022 10:40:21pm
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு  மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நெக்னாமலையைச் சேர்ந்த சரவணன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கர்நாடகா மாநிலம், பெங்களூரில் பணியாற்றி வந்த நிலையில்  சிறுநீரக பாதிப்பால்  இறந்தார். அவரது உடலை ஆம்புலன்ஸ் வாயிலாக வாணியம்பாடிக்கு அவரது உறவினர்கள் எடுத்து வந்தனர். பின், மலையடிவாரத்திலிருந்து, 7 கி.மீ.,யில் உள்ள நெக்னாமலைக்கு அவரது உடலை 'டோலி' கட்டி, துாக்கிச்சென்று சொந்த ஊரில் அடக்கம் செய்தனர்.
வாணியம்பாடி அருகே 60 ஆண்டுகளுக்கும் மேலாக வாணியம்பாடி நெக்னாமலைக்கு சாலை வசதி இல்லாததால் இறந்தவர் உடலை டோலி கட்டி எடுத்துச் சென்று அடக்கம் செய்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு  மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

 

Tags : State Human Rights Commission orders Tirupati District Collector

Share via