முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் கலைஞர் நூலக கட்டுமானங்களை ஆய்வு செய்து வருகிறார்.

by Editor / 07-06-2022 07:45:12pm
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் கலைஞர் நூலக கட்டுமானங்களை ஆய்வு செய்து வருகிறார்.

சிவகங்கை, புதுக்கோட்டை பகுதிகளில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு வந்தடைந்தார்.விமான நிலையத்திலிருந்து நேராக மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தை நோக்கி வந்த அவராய் அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,மாநகராட்சி மேயர்,உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் அவர் கலைஞர் நூலக கட்டுமானங்களை ஆய்வு செய்து பார்வையிட்டார்.இதன் தொடர்ச்சியாக இன்று இரவு  மதுரையில் தங்குகிறார்.

நாளை (புதன்கிழமை) மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக சிவகங்கைக்கு செல்கிறார். சிவகங்கையில் சமத்துவபுரத்தை திறந்து வைக்கிறார். பின்னர் அங்கு நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதோடு, ஏற்கனவே முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார்.

அதைத்தொடர்ந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டைக்கு வருகிறார். புதுக்கோட்டையிலும் அன்று மாலை சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு திருச்சி செல்கிறார். பின்னர் திருச்சியில் இருந்து விமானம் மூலம் நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை செல்கிறார்.

 

Tags : First Minister MK Stalin inspects the construction of the Artist Library in Madurai.

Share via