வனப்பகுதியில் 2 கள்ளத் துப்பாக்கி வைத்திருந்தவர்கள் கைது

by Editor / 31-05-2022 10:34:08pm
வனப்பகுதியில் 2 கள்ளத் துப்பாக்கி வைத்திருந்தவர்கள் கைது

கிருஷ்ணகிரி வனச்சரகம், கல்லாவி பிரிவு, நொச்சிப்பட்டி பீட், கல்லாவி வேட்டை தடுப்பு முகாமில் இருந்து வனவர் மற்றும் வனக்காப்பாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர்  இரவு வேட்டை தடுப்பு ரோந்து பணி மேற்கொண்ட போது, நொச்சிப்பட்டி, கருவானூர் மாட்டுவழி சரகம் கற்குட்டான் எண். 08 அருகில் சென்ற போது, கருவானூர் மாட்டுவழி பாதையில் வண்டி சத்தம் கேட்டு, பதுங்கியிருந்தபோது,  இரவு சுமார் 11.30 மணிக்கு, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் இருவர் வந்ததை கண்டு சுற்றிவளைத்து, அவர்களை சோதனை செய்ததில், அவர்களிடம் துப்பாக்கி இரண்டும், துப்பாக்கி பயன்படுத்த தேவையான கரிமருந்து, தோட்டாகள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து, இரண்டு நபர்களை விசாரணை செய்ததில், திருவனபட்டி இளங்கோ மற்றும் கழுதபட்டி தங்கராஜ் என விசாரணையில் தெரிந்தது.

மேலும், பிடிப்பட்ட இரண்டு எதிரிகள் மற்றும் பிடிப்பட்ட வாகனம், இரண்டு உரிமம் இல்லாத துப்பாக்கி ஆகியவை வனச்சரக அலுவலரின் அறிவுறைப்படி கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்று அவர்கள் மீது வன உயிரினக் குற்றம் பதிவு செய்து, எதிரிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வனப்பகுதியில் 2 கள்ளத் துப்பாக்கி வைத்திருந்தவர்கள் கைது
 

Tags : Arrest of 2 counterfeit gun owners in the forest

Share via