தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த காவல் ஆய்வாளர் கைது

by Staff / 11-06-2022 05:32:49pm
தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த காவல் ஆய்வாளர் கைது


சென்னை அயப்பாக்கம் தொழிலதிபர் ராஜேஷ் கடத்தப்பட்ட வழக்கில் கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முன்னாள் காவல் ஆய்வாளர் சரவணனை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கடத்தி பண்ணை வீட்டில் அடைத்து வைத்து சொத்துக்களை அபகரித்ததாக புகார் அளிக்கப்பட்டது இந்த வழக்கில் காவல் உதவி ஆணையர் சிவகுமார் காவல் ஆய்வாளர் சரவணன் உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் மூன்று காவலர்கள் ஆந்திரா தொழிலதிபர்கள் உள்ளிட்ட 10 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முன்னாள் காவல் ஆய்வாளர் சரவணன் மதுரவாயல் உள்ள அவரது நண்பரின் வீட்டில் பதுக்கி இருந்த போது சிபிஎஸ் சிஐடி போலீசார் கைது செய்தனர்

 

Tags :

Share via