கோவில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் கடை வீடுகள் தீக்கிரையாகின

by Editor / 15-06-2022 05:13:03pm
கோவில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் கடை வீடுகள் தீக்கிரையாகின

கும்பகோணம் அருகே உள்ள ராஜகிரியில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் சாமி சாமியார் தூக்கி செல்வது என்பது தொடர்பாக இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு கடை மற்றும் இரு வீடுகள் எரிக்கப்பட்டன. திரி கரைமேல் அழகர் அய்யனார் கோவில் ஆண்டு திருவிழாவின் போது இரண்டு பிரிவினருக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. நள்ளிரவில் இரு பிரிவினர்களுக்கு இடையே மோதல் மூண்டது பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப் பட்ட நிலையில் டிஎஸ்பி இன் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.எஸ் ஐ  ஒருவரின் மண்டை உடைக்கப்பட்ட தாக கூறப்படுகிறது இதனையடுத்து அப்பகுதிக்கு கலவர தடுப்பு வாகனம் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via