ஓமலூரில் போலி இரிடியத்தை காட்டி பல பேரிடம் பல கோடி மோசடி
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள தாத்தியம்பட்டியில் பெருமாள் என்பவருடைய மகன் வில்வேந்தன் இவர் தன்னிடம் இரிடியம் இருப்பதாக கூறி சினிமா பட பாணியில் பல பேரிடம் பல கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரிடம் 5கிலோ திமிங்கலத்தின் எச்சம், ஏமாற்றுவதற்காக வைத்திருந்த மாயக்கற்கள் மற்றும் 50ரூபாய் பணம் ஆகியவற்றை ஓமலூர் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இதேபோல் சுவாமி சிலைகள் இரண்டு, ஏர்கன் மற்றும் மான்கொம்பு வைத்திருந்த சக்கரைசெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் ராஜி என்பவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதால் வேறு ஏதேனும் பெரிய மோசடியில் ஈடுபட்டார்களா என ஓமலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : Many crores of rupees were swindled out of many people by showing fake iridium in Omalur