15 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்திய வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
சேலம் கொங்கணாபுரம் அருகே உள்ள சின்னமுத்தியம்பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடேஷ், மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவரும் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, காதலிப்பதாக சொல்லி, பாலியல் பலாத்காரம் செய்ததால், சிறுமி கர்ப்பமானார். இதுதொடர்பாக சேலம் சங்ககிரி மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்குபதிவு செய்யப்பட்டு, வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையானது போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி சாட்சியங்களின் அடிப்படையில் வெங்கடேசன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார். மேலும் 16 வயது சிறுவன் இளம் சிறார் குழுமத்தில் விசாரணையில் உள்ளார்.
Tags : A teenager who sexually abused a 15-year-old girl has been sentenced to 20 years in prison