எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 6 மீனவர்களை விசைப்படகு உடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீன்பிடித்துக்கொண்டிருந்த 16 மீனவர்களை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில். ஒரு படகில் இருந்த மீனவர்கள் இயந்திரக் கோளாறு காரணமாக காற்றின் வேகத்தால் எல்லை தாண்டி வந்ததாக தெரிவித்ததை அடுத்து அவர்கள் 5 பேரும் விடுவிக்கப்பட்டனர். மற்றொரு படகில் இருந்த மீனவர்களை கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
Tags :