தற்கொலை செய்ய 100 அடி பள்ளத்தில் சொகுசு காருடன் விழுந்த நபர்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பழனி பிரதான மலைச்சாலையில் தற்கொலை செய்வதற்காக சொகுசு கார் 100 அடி பள்ளத்தில் விழுந்தவர் காயங்களுடன் உயிர் தப்பினர்.புல்லூர் எஸ்டேட் அருகே 100 அடி பள்ளத்தில் பஸ் உருண்டு விழுந்து கிடப்பதாக வந்த தகவலை அடுத்து 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அங்கு விரைந்து வந்த காரில் இருந்த நபரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக கொடைக்கானல் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த நபர் தஞ்சாவூரை சேர்ந்த அன்பரசன் என்பது குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்ய முடிவெடுத்து இங்கு வந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
Tags :