மியான்மர் எல்லைப் பகுதியில் தமிழர்கள் 2 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை

by Editor / 06-07-2022 09:30:36pm
மியான்மர் எல்லைப் பகுதியில் தமிழர்கள் 2 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை

இந்தியா - மியான்மர் எல்லை மணிப்பூரில் மியான்மா் எல்லையையொட்டியுள்ளது மோரே என்ற நகரம். இங்கு வசித்து வந்தவர்கள் பி.மோகன்மற்றும் எம்.அய்யனாா்  இவர்கள் 2 பேருமே வம்சாவளி தமிழர்கள் ஆவர். இதில் மோகன் என்பவர் ஆட்டோ டிரைவராக இருந்தார். அய்யனார், தான் வசிக்கும் பகுதியிலேயே சிறிய கடை ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை, இவா்கள் 2 பேரையும் மியான்மா் எல்லையில் உள்ள டாமு என்ற இடத்தில் மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றுவிட்டனர்.

அந்த பகுதியில் உள்ளவர்கள் இவர்களின் உடல்களை கண்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, 2 பேரின் சடலங்களையும் கைப்பற்றி, அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இருவரையும் மியான்மரில் செயல்பட்டுவரும் 'பியூ ஷா தீ' என்னும் ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுவினர் படுகொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்ட தமிழர்கள் இருவரின் உடல்களும் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. மியான்மர் ராணுவ அரசை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டுள்ள மத்திய அரசு, இருவரின் உடல்களை தாயகம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
 

 

Tags : 2 Tamils ​​shot dead by terrorists in Myanmar border area

Share via