அரசு பேருந்து படிக்கட்டு உடைந்த விவகாரம்:பொறியாளர் உள்ளிட்ட இருவர் சஸ்பெண்ட்

by Editor / 09-07-2022 03:00:19pm
அரசு பேருந்து படிக்கட்டு உடைந்த விவகாரம்:பொறியாளர் உள்ளிட்ட இருவர் சஸ்பெண்ட்

திருவாரூர் அருகே உள்ள கங்களாஞ்சேரி ரயில்வே கேட் வேகத்தடையில் நாகூரில் இருந்து திருவாரூர் வந்து கொண்டிருந்த A37 அரசு பேருந்தின் படிக்கட்டு உடைந்தது.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. 

இந்த நிலையில் திருவாரூர் அரசு போக்குவரத்து கழக பொறியாளர் அசோகன் மற்றும் தொழில்நுட்ப பணியாளர் வீரபாண்டியன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து  நாகை மண்டல போக்குவரத்துக் கழக பொது மேலாளர் மகேந்திர குமார் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via