செஸ் ஒலிம்பியாட் போட்டி பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த திமுக எம்.பிக்கள்
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது இதுவே முதன்முறையாகும். இந்நிலையில், ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக அரசு சார்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது. அமைச்சர் மெய்யநாதன், திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழக தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிடோர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். அப்போது தமிழக அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசு ஒன்றும் வழங்கப்பட்டது.
Tags : DMK M.P.s who called the chess Olympiad meet the Prime Minister in person