ஜீன்23 க்கு முன்பு இருந்த நிலையே தொடரும்-.உயா்நீதிமன்றம் தீா்ப்பு

by Admin / 17-08-2022 12:58:19pm
ஜீன்23  க்கு முன்பு இருந்த நிலையே தொடரும்-.உயா்நீதிமன்றம் தீா்ப்பு

ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர்  இணைந்து தான் கட்சியின் செயற்குழு ,பொதுக்குழுவைகூட்டவேண்டும். எடப்பாடி பழனிசாமியோ  ஒ.பன்னீர் செல்வமோ தனியாக கூட்டக்கூடாது   ஒருவேளை,இதில்பிரச்சனை  உருவானால்  உயர்நீதிமன்றம்  ஆணையரை நியமித்து  செயற்குழு,பொதுக்குழுவை  கூட்டலாம்  .ஜீன் 23முன்பு இருந்த  நிலையே தொடரும் .23,6.22, 11.7.22 நடந்த   பொதுக்குழு   செல்லாது  .இடைக்கால  பொதுச்செயலாளராக   எடப்பாடி பழனிசாமி    தேர்ந்தெடுக்கப்பட்டது   செல்லாது   என்றும்    ஐந்தில்    ஒரு    பகுதியினர்  கேட்டுக்கொண்டால்   பொதுக்குழு  கூட்டலாம் .புதிதாக கூட்டப்படும்  பொதுக்குழுவில் ஒ.பி.எஸ் கலந்து கொள்ளவேண்டும்  என்றும் உத்தரவில்குறிப்பிடப்பட்டுள்ளது .ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர்  பதவி காலவதியாகவில்லை. அனைத்து பொறுப்புகளு ம் தொடரும் .ஒ.பி.எஸ்.தரப்பிற்கு  சாதகமாக தீர்ப்பு வந்ததால்  ஒ.பி.எஸ் வீட்டு முன்புபட்டாசு வெடித்து கொண்டாட்டம்.
 

 

Tags :

Share via