லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து- 9 பேர் பரிதாப பலி, 12 பேர் படுகாயம்

by Editor / 25-08-2022 01:14:44pm
லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து- 9 பேர் பரிதாப பலி, 12 பேர் படுகாயம்


கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டம் ஷிரா தாலுகாவில் உள்ள பாலேனஹள்ளி கேட் அருகே நள்ளிரவில் பயங்கர விபத்து ஏற்பட்டது. லாரி மற்றும் குரூசர் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர். இதில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இவர்கள் தும்கூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரும் ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via