இளம்பெண்கள், ஆண்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்த 3 பேர் கைது

by Editor / 27-08-2022 03:30:06pm
இளம்பெண்கள், ஆண்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்த 3 பேர் கைது

கேரளமாநிலம் எர்ணாகுளம் பகுதியில் போதைப்பொருள் கொடுத்து இளம்பெண்கள், ஆண்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்தவர்கள் நடமாட்டம் இருப்பதாகவும் ,இந்த கும்பலால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறைக்கு தொடர்ந்து கிடைத்த தகவலைத்தொடர்ந்து அந்த கும்பலை கைது செய்ய தீவீரமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவந்த நிலையில் இளம்பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து மிரட்டி பணம் பறித்த சம்பவத்தில் பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கேரளமாநிலம் எர்ணாகுளம்தோப்பும்பாடியை சேர்ந்த பெண்ணை, எடப்பள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு கடந்த 22ஆம் தேதி  வரவழைத்து போதை மருந்து கொடுத்துள்ளனர்.

பின்னர் அவரை மிரட்டி பணத்தை அபகரித்தனர். மேலும் அவரது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி அவரது கணக்கில் இருந்து பணமும் திருடப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணைமேற்கொண்டு எடப்பள்ளி தோப்பில் வீட்டைச் சேர்ந்த டிஜோ ரென்ஸ் (30), திருச்சூர் பெரமங்கலத்தைச் சேர்ந்த ஜோத்சனா (26), வாழ்கலை குடியிரிக்கல் வீட்டைச் சேர்ந்த சபீர் (27) ஆகிய குற்றவாளிகளை தோப்பும்பாடி போலீசார் கைது செய்தனர்.மேலும் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சில கும்பல்கள் முக்கியமாக பெண்களை குறிவைத்து குற்றச்செயல் புரிந்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
 

இளம்பெண்கள், ஆண்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்த 3 பேர் கைது
 

Tags :

Share via