அதிக அளவில் மீன் வரத்து மக்கள் மகிழ்ச்சி.விலை வீழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தில் விசைப்படகளில் மீன்பிடிக்க சென்றமீனவர்கள் இன்று காலையில் கரை திரும்பியுள்ளனர். இதனைத்தொடர்ந்து கடலில் அதிக அளவில் மீன் கிடைத்ததால் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நிறைய மீன்களோடு கரை திரும்பியுள்ளனர்.இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு மீன்வரத்து தொடங்கியுள்ளது. இதனால் ஒரு கிலோ இறால் மீன் ரூ. 90-ம், ஒரு கிலோ கணவாய் மீன் ரூ. 30-க்கும் விற்பனையானது. அதிக அளவில் மீன் வரத்து தொடங்கியுள்ளதால் மீனின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் போட்டி போட்டு மீன்களை கிலோ கணக்கில் வாங்கி சென்றவண்ணம் உள்ளனர்.
Tags :