நம் வீரர்கள் வீரமரணமடைந்த நாளை நினைவு கூர்கிறோம்- பிரதமர் நரேந்திர மோடி
காஷ்மீர் புல்வாமா மாவட்ட ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மத்திய ரிசர்வ் போலிஸ் படையினரின் வாகனத்தை பயங்கரவாதிகள் வெடிக்குண்டுகள் அடங்கிய வாகனத்தை மோத செய்து தற்கொலைத்தாக்குதல் நிகழ்த்தினர் .இத்தாக்குதலில் 40 படை வீரர்கள் சம்பவ இடத்திலே மரணமடைந்தனர்.இதற்கு ெஜய்ஷ் இ முகம்மது பயங்கரவாதஅமைப்பு காரணமாக இருந்தது.இதனைத்தொடர்ந்து இந்தியா பிப்ரவரி 26 ல் பாகிஸ்தான் பாலக்கோட்டில் தாக்குதல்நடத்தியது குறிப்பிடத்தக்கது.இந்த நாளில் நம் வீரர்கள் வீரமரணமடைந்த நாளைபிரதமர் நரேந்திர மோடி தம் ட்விட்டர்பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். புல்வாமாவில் இந்த நாளில் நாம் இழந்த நமது வீரம் மிக்க வீரர்களை நினைவு கூர்கிறோம். அவர்களின் உன்னத தியாகத்தை என்றும் மறக்க மாட்டோம். வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க அவர்களின் தைரியம் நம்மை ஊக்குவிக்கிறது
Tags :