காங்கிரஸ் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக சதி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

by Editor / 18-09-2022 10:11:20am
காங்கிரஸ் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த  பாஜக சதி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

கன்னியாகுமரியில் கடந்த 7ம் தேதி இந்திய  ஒற்றுமை நடை பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி, தற்போது கேரளாவில் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.17ஆம் காலை அவர் 10ம் நாள் நடைபயணம மேற்கொண்டார். மோடியின் பிறந்த நாளான நேற்று, காங்கிரஸ் அதை வேலையின்மை தினமாக அனுசரித்தது. மாணவர்களோடு கலந்துரையாடிய ராகுல் காந்தி கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.மேலும் அவர் கொல்லத்தில் அன்னை அமிர்தானந்த மயியை சந்தித்து ஆசிபெற்றார்.
முன்னதாக நடை பயணத்தின்  ஓய்வு நேரத்தில் ராகுல் காந்தியை புரட்சி சோஷலிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர்கள் சந்தித்து பேசினர். அப்போது, காங்கிரசில்  இருந்து பல மூத்த தலைவர்கள் விலகி பாஜ.வில் இணைவது குறித்து அவர்கள் கவலை தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த ராகுல், ‘கோவா உள்பட  சில மாநிலங்களில் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள், தலைவர்கள் விலகி செல்வது  பாஜ.வின் திட்டமிட்ட சதியாகும். பணம், அதிகாரத்தை பயன்படுத்தி காங்கிரசில் பாஜ திட்டமிட்டு  குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது,’ என தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த  பாஜக சதி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
 

Tags : பாஜக சதி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

Share via