கணவனை மின்கம்பத்தில் கட்டிவைத்து செருப்பால் அடித்த பெண்

by Editor / 21-09-2022 11:26:27am
 கணவனை மின்கம்பத்தில் கட்டிவைத்து செருப்பால் அடித்த பெண்

தெலுங்கானாவில் உள்ள ஸ்வர்ணப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி அகிலா. 4 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களுக்கு திருமணம் ஆன நிலையில் ஒரு மகன் இருக்கிறான். ஸ்ரீகாந்த் வரதட்சணையாக 20 லட்சம் ரூபாய் பெற்று திருமணம் செய்துகொண்டு உள்ளார்.
இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் ஸ்ரீகாந்த், வாரங்கல் பகுதியில் ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து குடும்பம் நடத்தியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அகிலா, ஸ்ரீகாந்தை தரதரவென இழுத்துச் சென்று அங்குள்ள மின் கம்பியில் கட்டி வைத்து செருப்பால் சரமாரியாக தாக்கினார். தொடர்ந்து ஆத்திரம் அடங்காமல் அவருக்கு செருப்பு மாலையும் அணிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Woman beats husband with sandal after tying him to electric pole

Share via