பெத்து எடுத்த குழந்தையை தத்து கொடுக்க மறுத்ததால் இளம்பெண் தலைதுண்டித்து கொலை.

by Editor / 22-09-2022 10:57:15am
பெத்து எடுத்த குழந்தையை தத்து கொடுக்க மறுத்ததால் இளம்பெண் தலைதுண்டித்து கொலை.

மும்பை அருகிலுள்ள கடற்கரையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சூட்கேஸில் பெண் ஒருவரின் உடல் கிடந்துள்ளது. அதை சோதனை செய்தபோது அதில் தலை இல்லாமல் இருந்துள்ளது. இதனைக் தொடர்ந்து இதுதொடர்பாக போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தியும் தகவல் ஏதும் இல்லாததால் முக்கிய ரயில் நிலையங்கங்களில் இது குறித்த அறிவிப்பு பலகை வைத்தனர். எனினும் 1 வருடம் கடந்த பின்னரும் தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி சானியா என்ற பெண்ணைக் காணவில்லை என்று கூறி அவர் உறவினர்கள் போலீஸில் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து ஒரு வருடத்துக்கு முன்னர் கிடைத்த சடலத்தின் புகைப்படத்தை வைத்து உறவினர்களிடம் கேள்வி எழுப்பியபோது அந்த பெண் அவரை போல இருப்பதாக கூறியுள்ளனர். பின்னர், போலிஸார் நடத்திய விசாரணையில், சானியாவின் கணவர் ஆசிப் தாங்கள் பழைய வீட்டை விற்றுவிட்டு மும்ப்ரா என்ற இடத்துக்கு வந்துவிட்டதாகவும், சானியா யாருடனோ ஓடிப் போய்விட்டதாக கூறியுள்ளார். அந்த சடலத்தின் DNA-வோடு சானியாவின் மகள் DNA-வை வைத்து சோதனை நடத்தியதில் அந்த சடலம் சானியாவுடையது என்பது தெரியவந்தது. இதனால் போலிஸாருக்கு சானியாவின் கணவர் மீது சந்தேகம் எழுந்து அவரிடம் விசாரணை நடத்தியபோது உண்மைகள் வெளிவந்துள்ளது.   கணவரே மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இந்தக் கொலை தொடர்பாக கணவர் ஆசிப், அவர் மூத்த சகோதரர், பெற்றோர் ஆகியோரை போலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெத்து எடுத்த குழந்தையை தத்து கொடுக்க மறுத்ததால் இளம்பெண் தலைதுண்டித்து கொலை.
 

Tags :

Share via