பாஜக அலுவலகம் உள்பட 2 இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு
கோவை சித்தாபுதூரில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தின் மீது நேற்று இரவு 8.35 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் திடீரென பெட்ரோல் குண்டு வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதைப் பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு திரண்டனர். அதற்குள் அந்த ஆசாமிகள் அங்கிருந்து தப்பித்து சென்றனர். இதற்கு இடையே இந்த சம்பவம குறித்து தகவல் அறிந்ததும் மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தலைமையில் பா.ஜ.க.வினர் 100க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காட்டூர் சரக உதவி கமிஷனர் வின்சென்ட் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா உள்ளிட்ட போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் அங்கு வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அந்த பாட்டிலை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
Tags :