18 மாதங்களாக கணவரின் சடலத்தோடு ஒரே அறையில் வாழ்ந்து வந்த மனைவி..

by Staff / 24-09-2022 12:08:12pm
18 மாதங்களாக கணவரின் சடலத்தோடு ஒரே அறையில் வாழ்ந்து வந்த மனைவி..

உத்தரபிரதேச மாநிலம் ராவத்பூர் பகுதியை சேர்ந்தவர் விம்லேஷ் குமார் டிடெக்ஸ். வருமானவரித்துறை ஊழியரான இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு விம்லேஷ் குமாரின் உடல் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் தனது கணவர் விம்லேஷ் குமார் உயிரிழக்கவில்லை என்றும் அவர் கோமாவில் இருப்பதாக அவரது மனைவியும், குடும்பத்தினரும் கருதி, மருத்துவமனையில் இருந்து உடலை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர் விம்லேஷின் உடலை அடக்கம் செய்யமால் ராவத்பூரில் உள்ள வீட்டிலேயே 18 மாதங்களாக வைத்துள்ளனர். வீட்டில் விம்லேஷின் அறையில் அவரது உடலை வைத்த அவரது மனைவி அந்த உடலுடன் கடந்த 18 மாதங்களாக வாழ்ந்து வந்துள்ளனர். விமல்குமார் உயிரிழந்த நிலையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதா? என்பது குறித்து அக்கம்பக்கத்தினர் கேட்டபோது தனது கணவர் கோமாவில் உள்ளதாகவும் அவர் விரைவில் மீண்டு வருவார் எனவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார். விம்லேஷ் குமார் உயிரிழந்தபோதும் அவரது குடும்ப ஓய்வூதியம் தொடர்பான ஆவணங்கள் எந்த வித முன்னேற்றமும் இன்றி அலுவலகத்திலேயே தேங்கி கிடப்பதாகவும், இது குறித்து விசாரிக்கும்படி தலைமை மருத்துவ அதிகாரிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று போலீசார், மருத்துவக்குழுவினர் உள்பட அதிகாரிகள் ராவத்பூரில் உள்ள விம்லேஷ் குமாரின் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்த போதும், விம்லேஷ் உயிருடன் கோமாவில் உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்ட அதிகாரிகள் உள் சென்று பார்த்த போது, வீட்டில் உள்ள ஒரு அறையில் கிட்டத்தட்ட அழுகிய நிலையில் விம்லேஷின் உடல் படுக்கையில் வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின் அந்த உடலை மீட்ட அதிகாரிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் விம்லேஷ் குமாரின் மனைவியிடம் விசாரணை நடத்தினர். அவர் மனநலம் தொடர்பான பிரச்சினையில் இருப்பதை கண்டறிந்த மருத்துவத்துறையினர் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதித்தனர். 18 மாதங்களுக்கு முன் உயிரிழந்த கணவரின் சடலத்தோடு, ஒரே அறையில் மனைவி வாழ்ந்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via