கணவர் கண்முன்னே மனைவிக்கு நேர்ந்த கொடுமை

by Staff / 29-09-2022 11:01:28am
கணவர் கண்முன்னே மனைவிக்கு நேர்ந்த கொடுமை

ஜார்கண்ட்: பலாமு பகுதியில் உள்ள சத்பாவ்ரா என்ற கிராமத்தில் 22 வயது இளம்பெண் ஒருவர் சம்பவத்தன்று தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது தாயார் வீட்டிற்கு செல்ல முற்பட்டுள்ளார். மனைவியை காணவில்லை என்று பதறியடித்த கணவர், அவரை இரவு முழுவதும் தேடி அழைந்த போது அங்கிருந்த தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் மனைவி நடந்து சென்று கொண்டிருந்ததை பார்த்து அவரை சமாதானப்படுத்திக்கொண்டிருந்தார். அப்போது அங்கே பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் கணவரை தாக்கி மனைவியை அருகேயுள்ள ஒரு இடத்திற்கு இழுத்துச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மேலும் அந்த பெண்ணை அந்த இடத்தில இருந்து மற்றொரு இடத்திற்கு கடத்த முயன்ற போது அவர்கள் பைக்கின் மீது வேறொரு நான்கு சக்கர வாகனம் மோதியுள்ளது. உடனே, அந்த பெண் தன்னை காப்பாற்றும்படி கெஞ்சியுள்ளார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்களை அழைத்து பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு, குற்றவாளிகளில் 2 பேரை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via