அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல்நலக்குறைவு
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் வழியில் ரயிலில் அமைச்சர் மெய்யநாதன் நேற்று சென்னைக்கு பயணம் செய்தார். புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் ஏறி சென்னைக்கு பயணித்துக் கொண்டிருந்த அமைச்சர் மெய்யநாதனுக்கு பயணத்தின் போது ரத்த அழுத்தம் காரணமாக திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.இதையடுத்து, நள்ளிரவு 2 மணி அளவில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கிய அமைச்சர் மெய்யநாதன் கடலூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அமைச்சர் மெய்யநாதன் அங்கு சிகிச்சை பெற்று வருவதை முன்னிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
Tags :