தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு தொடர்மழை -எச்சரிக்கை

by Editor / 01-10-2022 08:16:09am
 தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு தொடர்மழை -எச்சரிக்கை

 தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும், அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது..மேலும் தமிழகம், ஆந்திரா, மத்திய மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடாவை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் கடலோர பகுதிகளில் புயல் காற்று வீச வாய்ப்பு உள்ளது. , இலங்கை கடலோர பகுதிகள், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடா.ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க  இன்று அங்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via