தமிழகத்தை சேர்ந்த 55 பேர் ஆந்திராவில் கைது.

by Editor / 23-01-2022 11:19:05pm
தமிழகத்தை சேர்ந்த 55 பேர் ஆந்திராவில் கைது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே செம்மரம் வெட்டி கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த தகவலைத்தொடர்ந்து  ஆந்திரா போலீசார் மற்றும் வனத்துறையினர்  தீடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.அப்போது வனப்பகுதியில் செம்மரங்களை  கடத்த முயன்ற கும்பலை அவர்கள் சுற்றி வளைத்தனர்.இதில் 
போலீசாரை கண்டதும் அவர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்றதில் காவலர் ஒருவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.இந்த கும்பலை ,போலீசாரும்,வனத்துறையினரும் சுற்றிவளைத்து தமிழகத்தைச் சேர்ந்த 55 பேரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து நாற்பத்தி ஐந்து செம்மரக்கட்டைகள் இருபத்தி நான்கு கோடாரி, 31 செல்போன், 75 ஆயிரத்து 230 ரூபாய் பணம், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, மற்றும் கார், பறிமுதல்.செய்யப்பட்டுள்ளது.
 

 

Tags : 55 arrested from Tamil Nadu in Andhra Pradesh

Share via