மனைவியை சரமாரியாக குத்திக் கொன்ற கணவர்
கோவை மாவட்டம் சிவானந்தா காலனி பகுதியைச் சேர்ந்த தம்பதி நான்சி, வினோத்குமார். இவர்களுக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. நான்சி பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியர் ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வினோத்குமாருக்கு நான்சியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் இவர்களுக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது இதனால் இருவரும் கடந்த மூன்று வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதனிடையே நான்சிக்கும் வேறொரு நபருக்கும் பழக்கம் இருப்பதாக சந்தேகம் அடைந்த வினோத்குமார் நான்சி யை பின் தொடர்ந்து நான்சி பணிபுரியும் மருத்துவமனையில் மகப்பேறு பிரிவிற்கு சென்று நான்சியை சரமாரியாக குத்தி தானும் தற்கொலைக்கும் முயற்சித்துள்ளார். இதில் நான்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தன்னை விடுத்து மற்ற ஆண்களுடன் பழக்கம் வைத்ததால் நான்சியை கொலை செய்ததாக தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :