துடிதுடித்து உயிரிழந்த கலைஞர்

by Staff / 12-10-2022 03:57:19pm
 துடிதுடித்து உயிரிழந்த கலைஞர்

உத்தரபிரதேசம் மாநிலம் ஜான்பூரில் ராம்லீலா நாடகத்தின் போது சிவன் வேடத்தில் நடித்த கலைஞர் ராம் பிரசாத் என்பவர் திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். ராம் பிரசாத் மயங்கியதையடுத்து உடன் இருந்த கலைஞர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் கீழே விழுந்து சரியும் வரை நடனமாடி இருக்கிறார். நடனம் ஆடி கொண்டிருந்த போது மேடையிலேயே நடன கலைஞர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via