மாணவனை காதலித்து ஏமாற்றிய ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது

by Staff / 12-10-2022 05:13:34pm
 மாணவனை காதலித்து ஏமாற்றிய ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது

அம்பத்தூர் அருகே பிளஸ் 2 முடித்துவிட்டு கல்லூரி செல்வதற்காக காத்திருந்த 17 வயது மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு மாணவர் பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. பள்ளி மாணவன் அம்பத்தூரில் உள்ள சர் ராமசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற போது அதே பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்த சர்மிளா என்ற ஆசிரியை நடத்தி வந்த டியூஷனில் கடந்த 3 ஆண்டுகளாக படித்து வந்துள்ளார்.

அப்போது ஆசிரியர் சர்மிளாவுக்கும் மாணவனுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்ததாக தெரிகிறது. இதனிடையே சர்மிளாவுக்கு வீட்டில் வேறொரு நபருடன் திருமண ஏற்பாடு நடந்துள்ளது. அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்ததால், பள்ளி மாணவனுடனான தொடர்பை முழுவதுமாக துண்டித்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளான் என்பது தெரியவந்துள்து. கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியை நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

 

Tags :

Share via