கணவனில்லாத நேரத்தில் கணவனின் நண்பனோடு களியாட்டம்..இருவருக்கும் அரிவாள் வெட்டு.
மதுரை டி.கல்லுப்பட்டி அருகே குண்ணத்தூரைச் சேர்ந்தவர்கள் கொத்தனார் குருநாதன் (35) தேசிங்குராஜ் (25) இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில் குருநாதனை அடிக்கடி தனது டூவீலரில் தேசிங்குராஜ் அவரது வீட்டில் இறக்கி விடுவது வழக்கம். அப்போது குருநாதன் மனைவி சித்ராவிற்கும் தேசிங்குராஜ்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இது கள்ளக்காதலாக மாறவே குருநாதன் வீட்டில் இல்லாதபோது அவரது வீட்டில் இரவு இருவரும் வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர்.அப்போது திடீரென அங்கு வந்த குருநாதன் வீட்டில் இருவரும் தலைமையில் இருப்பதைப்பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின் ஆத்திரமடைந்த அவர் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இருவரது அலறல் சப்தம் கேட்கவே அக்கம் பக்கத்தினர் இருவரையும் ஓடிவந்து இருவரையும் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்தசம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags :