உக்ரைனில் நூற்றுக்கணக்கான பகுதிகளில் மின் விநியோகம் பாதிப்பு
உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிகல் இன்று கூறியதாவது, "உக்ரைனின் 3 பிராந்தியங்களில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்பு மீது ரஷிய பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக, நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு மின்சாரம் மற்றும் மின் விநியோக சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்திலும் கிழக்கில் சுமி பிராந்தியத்திலும் "முக்கியமான உள்கட்டமைப்பு" மீது ரஷ்யா ராக்கெட் தாக்குதல்களை நடத்தியது. கீவ்வில் ஐந்து டிரோன் தாக்குதல்களை நடத்தியது.மின் உற்பத்தி பாதிப்பை சரி செய்யும் பணிகள் நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.
Tags :