கணவனை கொலை செய்த மனைவி
தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், அப்பெண்ணிடம் அவரது கணவர் நாள்தோறும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. பொறுமை இழந்த அப்பெண் நேற்றிரவு கொடுமைப்படுத்திய கணவனை ஆத்திரமடைந்த மனைவி செங்கலால் அடித்தே கொன்றுள்ளார். இதனையடுத்து மனைவி காவல் நிலையத்தில் சரணடைந்து தான் கணவனை கொலை செய்ததாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags :