கஞ்சாவுடன் வாள் வைத்திருந்தவர்கள் கைது.

by Staff / 26-10-2022 05:17:49pm
 கஞ்சாவுடன் வாள் வைத்திருந்தவர்கள் கைது.

பெரியார் பேருந்து நிலையம் அருகே கஞ்சா மற்றும் வாள் ஒன்றுடன் நான்கு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.மதுரை திடீர் நகர் காவல் ஆய்வாளர் காசி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நன்மை தருவார் கோவில் அருகே மாநகராட்சி அலுவலகம் முன்பாக சந்தேகப்படும்படியாக நின்ற நான்கு வாலிபர்களை பிடித்து விசாரித்துள்ளார்.விசாரணையில் அவர்கள் கீரைதுரை வேத பிள்ளை தெருவை சேர்ந்த நாகராஜ் மகன் சரவண பாண்டி (29), கே புதார் சங்கர் நகர் முதல் தெருவை சேர்ந்த நாகேந்திரன் மகன் சூர்யா (19) , கீரைத்துரைய சேர்ந்த சண்முகம், அமெரிக்கன் மிஷன்தெருகுட்டி என்று தெரியவந்தது.அவர்களிடம் சோதனை நடத்தினார். சோதனையில் அவர்களிடம் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவும் வாள் ஒன்றும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுஅவற்றை பறிமுதல் செய்து அவர்கள் நான்கு பேரையும் கைது செய்தார்.

 

Tags :

Share via