மருத்துவக் கல்லூரி மாணவர் ஆஸ்டலில் தூக்கிட்டு தற்கொலை

by Editor / 05-11-2022 09:54:18pm
மருத்துவக் கல்லூரி மாணவர் ஆஸ்டலில் தூக்கிட்டு தற்கொலை

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் இளம் பருதி. இவருடைய தந்தை கண்ணன் ஓட்டுநர் பணிபுரிந்து வருகிறார். இளம்பருதி சரியாக படிக்க வில்லை என கடந்த ஆண்டு இவர் தேர்வில் தோல்வி அடைந்ததாகவும். தற்பொழுது இரண்டாம் ஆண்டிலும் தோல்வியடைந்ததால் தற்போது மூன்றாம் ஆண்டுக்கு செல்லக்கூடிய மாணவன் இரண்டாம் ஆண்டிலே படித்துக் கொண்டிருப்பதாகவும் இதனால் என்னுடைய நண்பர்கள் அனைவரும் மூன்றாம் ஆண்டில் படித்து வருவதால் மன வருத்தத்துடன் காணப்பட்டதாகவும் கடந்த ஒரு வாரமாக சரியாக சாப்பிடாமல் தனிமையில் இருந்ததாகவும் நண்பர்களுடன் சரியாக பேசாமல் தனிமையில் அதிக நேரம் இருந்ததாக கூறப்படுகிறது மேலும் இன்று அனைவரும் கல்லூரி சென்று மாலை நண்பர்கள் விடுதிக்கு வந்து பார்க்கும் பொழுது சரியாக ஏழு மணி அளவில் அவருடைய தங்கம் அறையில் தூக்கிட்டு தொங்கி நிலையில் இருந்ததாக மாணவர்கள் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்த உடன் அவர்கள் உடனடியாக தர்மபுரி நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் காவல்துறையினர் விரைந்து வந்து தூக்கில்  தொங்கிய மாணவன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் பின்னர் மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via