புதுச்சேரி துணை நிலை ஆளுநர், தமிழிசை கண்டனம்

by Staff / 06-11-2022 01:45:49pm
புதுச்சேரி துணை நிலை ஆளுநர், தமிழிசை கண்டனம்

ஆளுநர்களே எரிமலையோடு விளையாடாதீர்கள் என்ற முரசொலி கட்டுரைக்கு புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்  நேற்று வெளியான முரசொலி கட்டுரையில் ஆளுநர்களே எரிமலையோடு விளையாடாதீர்கள் என்று கடும் விமர்சித்து வெளிவந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர், தமிழிசை வெளியிட்டுள்ள அறிக்கையில், "எரிமலைகள் இமயங்களை ஒன்றும் செய்துவிட முடியாது. சிலந்தி வேடமிட்டு வரும் மூட்டை பூச்சிகளே; உங்கள் சாயம் வெளுக்கிறது என்ற பயமா? எனவேதான் எதைக் கண்டாலும் தினம் தினமும் அஞ்சும் தெனாலி திரைப்படக் கதாநாயகன் போல் நிழலுக்கும் அஞ்சி அஞ்சி அடிக்கடி ஆளுநரை பற்றி பக்கம் பக்கமாக கட்டுரை எழுதுகிறீர்கள். சீரியலிலும், சினிமாவிலும் நடித்துவிட்டு பதவியில் அமர்ந்திருப்பவர்களுக்கு கேமரா மேனியா? மைக் மேனியாவா? இல்லை எங்களுக்கா? உண்மையை உரக்கச் சொல்லும் எங்களுக்கு மைக் மேனியாவும் இல்லை கேமரா மேனியாவும் இல்லை. எங்களுக்கு மைக் மேனியா என்பதைவிட உங்களுக்குத்தான் மோடி போபியா (மோடி பயம் ) எனவே இந்த பயத்தில் குளிர் ஜுரம் வந்து அடிக்கடி என்னைப்பற்றி கட்டுரை வருகிறது" என விமர்சித்துள்ளார்.
 

 

Tags :

Share via