அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் போராட்டம்

by Staff / 07-11-2022 05:07:18pm
அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் போராட்டம்

நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் இந்த கல்லூரி தமிழகத்தில் முதல் அரசின் சித்த மருத்துவக் கல்லூரி ஆக தொடங்கப்பட்டு மருத்துவமனை உடன் செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கான விடுதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இதுலமடைந்ததன் காரணமாக மூடப்பட்டது. இதேபோல் மாணவிகளுக்கான விடுதி ஒன்று கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த சுமார் 150 க்கு மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர் இந்த விடுதியில் மேற்கூரை அவ்வப்போது இடிந்து விடுவதாகவும் விடுதியில் உள்ள உணவு சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும் கூறி தொடர்ந்து மாணவிகள் தரப்பில் மருத்துவ கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்லூரி மாணவி விடுதிக்குள் மர்ம நபர் ஒருவர் புகுந்து மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது இதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திடம் விடுதியில் உள்ள மாணவிகள் புகார் அளித்துள்ளனர் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்லூரி முதல்வர் அலுவலகத்திற்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இதனை தொடர்ந்து கல்லூரி முதல்வர் சாந்த மரியா மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் ஆனால் இதனை ஏற்க மறுத்த மாணவ மாணவிகள் சித்த மருத்துவ இயக்குனர் மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் நேரடியாக தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வுக்கு ஏற்பாடு செய்தால் மட்டுமே போராட்டத்தை கைவிட போவதாக அறிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மர்ம நபர்கள் விடுதிக்குள் புகுந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவிகளிடம் காவல்துறையினர் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் விடுதி காப்பாளர்கள் மற்றும் காவலர்களை கூடுதலாக நியமிக்க நடவடிக்கை எடுக்க மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து மாணவிகளிடம் கல்லூரி நிர்வாகம் சார்பில் பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறது
 

அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் போராட்டம்
 

Tags :

Share via