இந்திய வீரர்களுக்கு ஓய்வு வழங்கக்கூடாது

by Staff / 29-11-2022 04:18:41pm
இந்திய வீரர்களுக்கு ஓய்வு வழங்கக்கூடாது

இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் அனைத்து மூத்த வீரர்களுக்கும் ஓய்வு கொடுத்துவிட்டு இளம் வீரர்களுடன் விளையாடி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் அனைத்து வீரர்களும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடி வருகின்றனர்.
ஆனால் அரையிறுதியில் வெளியேறிய இந்திய வீரர்களுக்கு ஓய்வு வழங்கபட்டுள்ளது. ரோகித், ராகுல் உள்ளிட்ட வீரர்களை தொடர்ந்து விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும். அடுத்த ஆண்டு 2023ம் வரை இந்திய அணியில் எந்த வீரருக்கு ஓய்வு வழங்கவே கூடாது என கூறியுள்ளார்.

 

Tags :

Share via