அரைநிர்வாணமாக தைல மரக் காட்டில் பெண்ணின் சடலம்

by Editor / 30-11-2022 09:33:38am
அரைநிர்வாணமாக தைல மரக் காட்டில் பெண்ணின் சடலம்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள தெற்குப் பல்லவராயன் பத்தை கிராமத்தைச் சேர்ந்தவர் திருச்செல்வம். இவர் வெளிநாட்டில் பணியாற்றி வந்த நிலையில், இவரது மனைவி 35 வயதான பழனியம்மாள் கடந்த 23-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை இது குறித்து பழனியம்மாள் தந்தை தங்கவேல் கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். புகார் மனுவின் அடிப்படையில் கறம்பக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ஊருக்கு வெளியே உள்ள தைல மரக் காட்டில் பழனியம்மாள் அரை நிர்வாணமாக அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

பழனியம்மாள் கொலை செய்யப்பட்டதாகவும் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள், புதுப்பட்டியில் மூன்று மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கறம்பக்குடி புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் கறம்பக்குடி வட்டாட்சியர் இராமசாமி  மற்றும் ஆலங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் தீபக் ரஜினி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி. உரிய விசாரணை நடத்தி பழனியம்மாள் கொலை செய்யப்பட்டிருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பிறகு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சூழலில், போலீசார் தீவிரமாக இவ்வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்

இந்த வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வெண்ணாவல்குடி கொத்தகோட்டையான் குடியிருப்பு பகுதியை சேர்ந்த, 19 வயதான இளைஞர் பாண்டியராஜனை நேற்று இரவு கைது செய்த போலீசார், அவரை ஆலங்குடி குற்றவியல் மற்றும் உரிமையியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்னர் ஆஜர் படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர்.

 

Tags :

Share via