ஒருமாதத்தில் கள்ளச்சாராயம் குடித்து 72 பேர் உயிரிழப்பு

by Editor / 23-01-2023 05:12:42pm
ஒருமாதத்தில் கள்ளச்சாராயம் குடித்து 72 பேர் உயிரிழப்பு

பீகாரில் கடந்த ஒரு மாதத்தில் கள்ளச்சாராயம் குடித்து 72 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று சிவான் மாவட்டத்தில் உள்ள லகரி நமிகாஞ்ச் பகுதியில் கள்ளச்சாரயம் குடித்து சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அம்மாநிலத்தில் கள்ளச்சாரயத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் போராடி வருகின்றனர். பீகார் மாநிலத்தில் மது விலக்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via