தனக்கு பிடித்திருந்த கண் திருஷ்டி விலகியது -அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்

by Editor / 02-12-2022 09:14:47pm
 தனக்கு பிடித்திருந்த கண் திருஷ்டி விலகியது -அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தமிழக முதல்வர் வருகின்ற 8-ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு வருகை தர உள்ள சூழலில், நிகழ்ச்சி நடைபெற உள்ள மேடையை இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

 அவருடன், தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடன் இருந்த சூழலில், விழாவினை சிறப்பாக நடத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

 அதனைத் தொடர்ந்து, செய்தியாளருக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அளித்த பேட்டியில் கூறியதாவது, வருகின்ற 8-ம் தேதி ரயில் மூலம் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ள தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 அதனைத் தொடர்ந்து, கணக்கப்பிள்ளை வலசை பகுதியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்க உள்ளார். 

அதேபோல், முதல்வருக்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டமே வருகின்ற 8-ம் தேதி விழா கோலம் சூலும் வகையில் விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்ட வருகிறது என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, தனக்கு உடல்நிலை சரியில்லை என பரவிய செய்திகள் எனக்கு பிடித்திருந்த கண் திருஷ்டி விளக்கியது போல் உள்ளது என அமைச்சர் பதிலளித்தார்.

முதல்வர் தென்காசி வருகையை முன்னிட்டு நெல்லை  சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஸ் குமார் ரயில்நிலையம்,குற்றாலம் விருந்தினர் மாளிகை,உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டார்.

 

Tags :

Share via